Monday, February 26, 2007

மணிதன் யார்? எவன் மணிதன் ??

யார் இந்த இளைஞன்? “தமிழை இப்படித் தலைப்பிலேயே கொலை செய்திருக்கின்றான்” என்று தமிழார்வலர்கள் எண்ணலாம். இதோ அதற்கான விளக்கம்: என்னுடைய பெயர் சுப்ரமணி. இன்றைய கணிணி உலகில் அனைவரும் எதை எதையோத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர், அதற்காக பலவற்றை அவர்கள் இழந்திருப்பதை அறியாமல். இதில் மிகவும் முக்கியமானதொரு இழப்பு “மனித நேயம்”.
இப்போது சிறுவர்களிடம் கேட்டால், “நான் மருத்துவராக விரும்புகிறேன் அல்ல்து …” என்று கூறுவார்கள். இன்னும் சில வருடங்கள் கழித்து சிறுவர்களிடம், நீ என்னவாக விரும்புகிறாய் என்று கேட்டால், அவர்கள் “நான் மனிதனாக விரும்புகிறேன்” என்று கூறுமளவுக்கு மனிதர்கள் இப்போது இயந்திர மனிதர்களாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். நானும் இதற்கு விதி விலக்கு அல்ல. இப்போதிலிருந்தே நான் மனிதனாக மாற விரும்புகிறேன்… மனிதனாக மாற முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன், விரைவில் இந்த தலைப்பும், நானும் “மனிதன்” ஆக மாறுவோம்.
முதலில் எழுத்துப் பிழை என்று நினைத்திருந்த நீங்கள் இப்போது இதை கருத்துப் பிழையாக கருதலாம். இப்போது சொல்லுங்கள் இதில் ஏதேனும் பிழை உள்ளதா?

குத்திக் காட்டியது - என் தமிழ் ...!

" This kavithai was written by PALANI (PALANIVEL) "
http://en-kavithai.blogspot.com/2006/06/blog-post.html
Please do see the comments for more information... (by the way thanks Sethukarasi and Palanivel for claiming the same and bringing to notice)

தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கைத் தவறி விழும் முன் சொன்னேன்
"Sorry" தாத்தா என்று ...!

தூங்கும் பொழுது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும்
சொல்வேன் "Thanks" ம்மா என்று ...!

நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில்
எழுதினேன்"Happy Birthday da" என்று ... !

காலையில் நாளிதழ் படிக்கும் போது எதிர் விட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் - முந்திக்
கொள்வேன்"Good Morning Uncle" என்று ...!

கோயிலில் பத்தாம் வகுப்பு சிநெகிதி
கணவனுடன்அவள் பேசும் முன் - முடித்துக்
கொள்வேன்"Hai" என்று ...!

மாலையில் கடற்க்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
"I Love You" என்று ...!

இரவில் ...வீட்டிற்கு செல்லும் வழியில் - காலைகுத்தியது
முள் ...!"Amma" அம்மா என்று அலறினேன் ...
குத்தியது முள்ளில்லை - என்னைகுத்திக் காட்டியது - என் தமிழ் ...!