Monday, February 26, 2007

குத்திக் காட்டியது - என் தமிழ் ...!

" This kavithai was written by PALANI (PALANIVEL) "
http://en-kavithai.blogspot.com/2006/06/blog-post.html
Please do see the comments for more information... (by the way thanks Sethukarasi and Palanivel for claiming the same and bringing to notice)

தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கைத் தவறி விழும் முன் சொன்னேன்
"Sorry" தாத்தா என்று ...!

தூங்கும் பொழுது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும்
சொல்வேன் "Thanks" ம்மா என்று ...!

நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில்
எழுதினேன்"Happy Birthday da" என்று ... !

காலையில் நாளிதழ் படிக்கும் போது எதிர் விட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் - முந்திக்
கொள்வேன்"Good Morning Uncle" என்று ...!

கோயிலில் பத்தாம் வகுப்பு சிநெகிதி
கணவனுடன்அவள் பேசும் முன் - முடித்துக்
கொள்வேன்"Hai" என்று ...!

மாலையில் கடற்க்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
"I Love You" என்று ...!

இரவில் ...வீட்டிற்கு செல்லும் வழியில் - காலைகுத்தியது
முள் ...!"Amma" அம்மா என்று அலறினேன் ...
குத்தியது முள்ளில்லை - என்னைகுத்திக் காட்டியது - என் தமிழ் ...!

2 comments:

சேதுக்கரசி said...

இந்தக் கவிதையை எழுதியவரின் பெயரையும் வெளியிட்டிருக்கலாமே:

எழுதியவர்: பழனி (பழனிவேல்)

http://en-kavithai.blogspot.com/2006/06/blog-post.html

படித்ததில் பிடித்த கவிதைகளை உங்கள் வலைப்பூவில் தாராளமாக இடுங்கள்… எழுதியவரின் பெயருடன். நன்றி.

This kavithai was written by PALANI (PALANIVEL)

பழனி said...

நன்றி சேதுக்கரசி ...

தங்கள் வலைப்பூவின் வாசகர்களுக்கு இக்கவிதையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் ... மகிழ்கிறேன் ..
கவிதை இன்னாருடையது என்றும் அறிமுகப்படுத்தியிருந்தால் மிகவும் அகமகிழ்ந்திருப்பேன்.

நட்புடன்,
பழனி